search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜாமீனில் வந்து தலைமறைவு: 24 ஆண்டுக்கு பிறகு ரவுடி-கூட்டாளி கைது
    X

    ஜாமீனில் வந்து தலைமறைவு: 24 ஆண்டுக்கு பிறகு ரவுடி-கூட்டாளி கைது

    • ரமேஷ் என்பவரை ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார்.
    • தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    வடபழனி, கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரை கடந்த 1998-ம் ஆண்டு திருவொற்றியூரை சேர்ந்த ரவுடி நாகபூசனராவ் என்கிற குக்கா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ய முயன்றார். இதில் ரமேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த வழக்கில் கைதான நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து உள்ளிட்ட 4 பேரும் ஜாமீனில் வெளியே வந்த பின்னர் 1999-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த ரவுடி நாகபூசனராவ், அவரது கூட்டாளி கருமுத்து ஆகிய 2 பேரையும் கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×