என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
73-வது பிறந்த நாள்: விண்ணுலகிலும், மண்ணுலகிலும் பாரதத்தை நிலை நிறுத்தியவர் மோடி: கவர்னர் தமிழிசை புகழாரம்
- அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- உங்கள் பணி தொடர வேண்டும், தேசம் மேலும் வளர வேண்டும், அதற்கு மக்கள் துணை நிற்பார்கள், இறைவனும் அருள்புரிய வேண்டும்.
சென்னை:
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
விண்ணுலகில் சந்திராயன், ஆதித்யா போன்ற விண்கலத்தில் வெற்றி கண்டு மண்ணுலகில் பாரத தேசத்தை டிஜிட்டல் மயமாக்கி சுயசார்பு பாரத தேசத்தை உருவாக்கி உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய தலைவர், வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கிய தலைவர், மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் நலம் வாழ திட்டம் தீட்டிய தலைவர், ஏழை, எளிய மக்களின் நலன் காக்கும் தலைவர்.
அடுத்த தலைமுறைக்கும் பாடுபடும் தலைவர் பாரதப்பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். பாரதப்பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து நீண்ட நெடுங்காலம் பாரத தேசத்தையும், பாரத மக்களையும் வழிநடத்திச் செல்ல எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இந்திய நாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும், குறிப்பாக நலிந்தோர் நலன் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில், இந்தியாவிற்கு சிறப்பான வழி காட்டி சென்றுகொண்டு இருக்கிற பாரதப் பிரதமர் மோடி பிறந்தநாளில் விஸ்வகர்மா என்ற நலிந்தோர் நலன் பேணும் திட்டம் செயல்படுத்துவதை அறிந்து நாட்டு மக்கள் நல்வாழ்த்து கூறுகிறார்கள்.
தனது 9 ஆண்டுகால ஆட்சியில், இந்திய தேசத்தை வளம் நிறைந்த, வலிமைமிக்க நாடாக, உலக அரங்கில் நிலை நிறுத்திய பிரதமர் அவர்களே! உங்கள் பணி தொடர வேண்டும், தேசம் மேலும் வளர வேண்டும், அதற்கு மக்கள் துணை நிற்பார்கள், இறைவனும் அருள்புரிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்