என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிப்பு
- காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.
- அணையில் இருந்து காவிரியில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் படிப்படியாக சரிந்து வருகிறது.
ஒகேனக்கல்லில் நேற்றுமுன்தினம் 17 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 16 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்துடன் அமர்ந்து பரிசலில் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் சவாரி சென்று வருகிறார்கள்.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி அணையில் இருந்து காவிரியில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரம் க ன அடி தண்ணீர் நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
கால்வாயில் 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்