search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை ரூ.3,570 கோடி செலவில் உருவாகிறது: அடுத்த மாதம் கட்டுமான பணிகள் தொடக்கம்
    X

    துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை ரூ.3,570 கோடி செலவில் உருவாகிறது: அடுத்த மாதம் கட்டுமான பணிகள் தொடக்கம்

    • சாலை 21 கி.மீ. தூரத்துக்கு 2 அடுக்குகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது.
    • பறக்கும் சாலை பணிகளை 2½ வருடத்தில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைக்க கடந்த 2009-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அ.தி.மு.க. அரசு சுற்றுச்சுழல் பிரச்சினைகளை காட்டி இந்த திட்டத்தை நிறுத்தியது.

    இந்நிலையில் தற்போது தி.மு.க. அரசு அமைந்த பிறகு இந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை ரூ.3,570 கோடி செலவில் உருவாகிறது.

    இந்த சாலை 21 கி.மீ. தூரத்துக்கு 2 அடுக்குகளுடன் பிரமாண்டமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளும் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

    இந்த பறக்கும் சாலையின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மும்பையை சேர்ந்த ஜெ.குமார் இன்ப்ரா நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த பறக்கும் சாலை பணிகளை 2½ வருடத்தில் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலம் முதல் கோயம்பேடு வரை 2 அடுக்கு கொண்டதாக இருக்கும். இதில் முதல் அடுக்கு பறக்கும் சாலை கோயம்பேடு- துறைமுகம் இடையே உள்ளூர் வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும்.

    இதில் 7 இடங்களில் நுழைவு பாதையும், 6 இடங்களில் வெளியேறும் பாதையும் அமைக்கப்படுகிறது. 2-வது அடுக்கு மூலம் துறை முகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் எளிதாக செல்லலாம். இந்த பறக்கும் சாலை நேப்பியர் பாலத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆறு வழியாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையிலும் அமைகிறது.

    துறைமுகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சரக்குகளை விரைவில் கொண்டு செல்ல இந்த பறக்கும் சாலை திட்டம் உதவும்.

    Next Story
    ×