search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    15 மண்டலங்களில் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது
    X

    15 மண்டலங்களில் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது

    • குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டங்கள் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் கூட்டங்கள் மாதத்தின் 2-வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த மாதத்திற்கான கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

    திருவான்மியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 15 மண்டலங்களில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிநீர் வரி, நிலுவையில் உள்ள கட்டணம், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×