என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மின் இணைப்புக்கான பெயர் மாற்ற முகாம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
- சிறப்பு பெயர் மாற்றம் முகாம் பொதுமக்களிடையே அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளது.
- இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்", கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது.
இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம் குறித்து பொதுமக்களிடையே கிடைக்கப்பெற்ற அதிகப்படியான வரவேற்பினை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலஅவகாசம் 24-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிவடைவதாலும், இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மேலும் ஒரு மாதகாலம் அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்