search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி- ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை
    X

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி- ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை

    • கழுத்து வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை.
    • மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என கூறியதால் ஓமந்தூராரில் சிகிச்சை.

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கைது நடவடிக்கையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவ்வபோது பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    கழுத்து வலிக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மருத்துவர்கள் உயர் சிகிச்சை தேவை என கூறியதால், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    Next Story
    ×