search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    X

    148 பெண்கள், 2 திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோக்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

    • ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.
    • மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பெண்களுக்கு ஆட்டோ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்தில் ஆட்டோ வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நல வாரியத்தில் பதிவு செய்த 500 பெண் ஓட்டுனர்கள் மற்றும் திருநங்கை ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்ஷா, தொழில் முறை டாக்சி வாகனம் வாங்குவதற்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 148 பெண் ஓட்டுனர்கள் மற்றும் 2 திருநங்கை ஓட்டுனர்களுக்கு புதிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பெண்களுக்கு ஆட்டோ வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×