search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    30-ந்தேதி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் கொண்டு வர முடிவு
    X

    30-ந்தேதி சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் கொண்டு வர முடிவு

    • டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்படுகிறது.
    • கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மன்ற கூட்டரங்கில் நடக்கிறது.

    மேயர் பிரியா தலைமையில், துணைமேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

    இக்கூட்டத்தில் நிலைக்குழு தலைவர்கள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. பருவ மழைக்காலம் தொடங்க இருப்பதால் அதற்கு முன்னதாக மழை நீர்வடிகால் பணிகளை விரைந்து முடித்தல், 2.0 சிங்கார சென்னை திட்டத்தின்கீழ் அழகுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்படுகிறது. கொசு ஒழிப்பு, தூய்மை பணிகள், சாலைப் பணிகள் போன்றவற்றை தீவிரப்படுத்தவும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது.

    Next Story
    ×