என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
நெல்லை-திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயில்: பக்தர்கள் மகிழ்ச்சி
Byமாலை மலர்4 Jun 2022 5:16 AM GMT (Updated: 4 Jun 2022 5:16 AM GMT)
வைகாசி விசாகத்தையொட்டி நெல்லை-திருச்செந்தூருக்கு சிறப்பு விரைவு ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லை:
தமிழ் மாதமான வைகாசியில் முருகன் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் வருகிறது. அந்த நாளில் திருச்செந்தூர் செல்லும் பஸ்களில் அதிக அளவு கூட்டம் இருக்கும் என்பதால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (06703) நெல்லையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - நெல்லை இடையே இந்த சிறப்பு ரெயிலானது (06704) திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரெயில்கள் பாளை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவற்றில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர் (16731) மற்றும் திருச்செந்தூர் - நெல்லை (06678) விரைவு ரெயில்களில் வருகிற 13-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர் (06673) மற்றும் பாலக்காடு -திருச்செந்தூர் (16732) விரைவு ரெயில்களில் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
தமிழ் மாதமான வைகாசியில் முருகன் கோவில்களில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறும். வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாகம் வருகிறது. அந்த நாளில் திருச்செந்தூர் செல்லும் பஸ்களில் அதிக அளவு கூட்டம் இருக்கும் என்பதால் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி 12-ந் தேதி நெல்லை-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (06703) நெல்லையில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர் - நெல்லை இடையே இந்த சிறப்பு ரெயிலானது (06704) திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.10 மணிக்கு நெல்லை வந்து சேரும். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த ரெயில்கள் பாளை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவற்றில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.
மேலும் பயணிகளின் வசதிக்காக பாலக்காடு - திருச்செந்தூர் (16731) மற்றும் திருச்செந்தூர் - நெல்லை (06678) விரைவு ரெயில்களில் வருகிற 13-ந்தேதி முதல் 13-ந்தேதி வரையும், நெல்லை - திருச்செந்தூர் (06673) மற்றும் பாலக்காடு -திருச்செந்தூர் (16732) விரைவு ரெயில்களில் வருகிற 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X