search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணம்
    X
    பணம்

    தருமபுரியில் 10 கோடி மோசடி: ஏலசீட்டு சீட்டு நடத்தி விட்டு தலைமறைவானவரின் கூட்டாளியை மடக்கிய பொதுமக்கள்

    தீபாவளி சீட்டிற்கு பணம் போதாது என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
    தருமபுரி:

    தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்த மணிவண்ணன், செந்தில் ஆகியோர் மாவட்டத்தில் குமாரசாமிபேட்டை, பிடமனேரி, சோளக்கொட்டாய், நடுப்பட்டி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இவர்கள் ஏரியா வாரியாக பிரித்து பெண்களை அந்தந்த பகுதிக்கு ஒருவர் என ஏஜெண்டுகளாக அமைத்து அவர்கள் மூலம் ஒரு லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு என நடத்தி வந்துள்ளனர்.

    இந்த இரு சீட்டுகளிலும் சுமார் 2 ஆயிரம் நபர்களை உறுப்பினராக சேர்த்து கடந்த 6 ஆண்டுகளாக ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

    தீபாவளி சீட்டிற்கு மாதம் 1,500 ரூபாய் என 12 மாதங்கள் கட்டிய பிறகு தீபாவளியன்று கட்டியவர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் ஒரு கிலோ ஸ்வீட், ஒரு கிலோ காரம் ஒரு பெரிய பட்டாசு பாக்ஸ் கொடுத்து வந்துள்ளனர்.

    இதற்கு ஆசைப்பட்ட பொதுமக்கள் தீபாவளி சீட்டில் பணம் கட்டியுள்ளனர்.

    மேலும் தீபாவளி சீட்டிற்கு பணம் போதாது என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    சில மாதங்களாக சீட்டு முடிந்த பின் சிலரது முதிர்வு அடைந்த நிலையில் சீட்டு பணத்தை பெற அவர்களது வீட்டிற்கு பல முறை சென்ற போது வீடு பூட்டி இருந்த நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் மணிவண்ணன் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளது தெரியவந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த சீட்டு போட்டவர்கள் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை குமாரசாமி பேட்டையில் உள்ள மணிவண்ணனின் உறவினரும் சீட்டு பணம் வசூல் செய்யும் செந்தில் என்பவரை பிடித்து தருமபுரி டவுன் போலீசில் ஒப்படைத்து முற்றுகையிட்டனர்.

    தலைமறைவான மணிவண்ணனிடம் ஏலச்சீட்டு பணத்தை பெற்று தர வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

    அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த ஏலச்சீட்டால் 10 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

    ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் 5 மணிநேரமாக காத்திருந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×