என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கரூரில் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
கரூர்:
கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதம் கிலோ ரூ.40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூல் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த நூலை சந்தைப்படுத்தாமல் இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தையில் தேவைக்கேற்றவாறு நூல் கிடைப்பதில்லை.
அதேசமயம் நூல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இதனால் மானியத்தை நிறுத்தி, ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் சந்தைக்கு நூல் வரத்து சீராக இருக்கும். அதன் மூலம் உற்பத்தியை இயல்பாக நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
ஆனால், தற்போது உள்ள சூழலில் நாள்தோறும் நூல் விலை ஏறி வருவதால், ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நூல் விலையை குறைக்க வலியுறுத்தி மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.
அதன்படி இன்று கரூர் மாநகரில் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி என 800 நிறுவனங்கள், 150 நூல் வினியோகஸ்தர்கள், டையிங் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், சிறு தையல் நிறுவனங்கள், ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் உள்ளிட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக கரூர் செங்குந்தபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
சுமார் 2½ லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, சுமார் ரூ.100 கோடி அளவில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்