என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி தர வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராய விற்பனை செய்வதாக கூறி கடந்த 26ந் தேதி அவரை காவல் துறையினர் விசாரணைக்கு திருவண்ணாமலை அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு 27ந் தேதி அன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டதாக காவல் துறையின் சார்பில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அன்று மாலையே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது நல்ல உடல் நலத்துடன் இருந்த தங்கமணி அவர்கள் அதற்கு அடுத்த நாளே உயிரிழக்கிறார் என்றால் இந்த மரணத்தில் காவல் துறையினர் மீது சந்தேகம் ஏற்படுவது என்பது நியாயமான ஒன்றுதான்.
விசாரணைக்காக அழைத்துச் சென்ற தங்க மணியை காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாகத்தான் அவர் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர் என்றும், இந்த மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்றபோது, காவல் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கதவுகளை மூடியதோடு, அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காவல் துறையினர் தனது தந்தையிடம் 2 லட்சம் ரூபாய்பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதை தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொன்று விட்டதாகவும் உயிரிழந்த தங்கமணியின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றம் இழைப்போரை கண்டறிந்து, விசாரணை நடத்தி, அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டியது காவல் துறையினரின் கடமை. இதை நான் மறுக்கவில்லை. அதே சமயத்தில் விசாரணை என்ற போர்வையில் உயிர் போகும் அளவுக்கு கடுமையாக தாக்கி, துன்புறுத்துவது என்பது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.
ஒரு பக்கம் தங்கமணி சாராய விற்பனையில் ஈடுபடுகிறார் என்று கூறி அவரை விசாரணைக்கு காவல் துறையினர் அழைத்துச் செல்கின்றனர். மறுபுறம், அவரது மகன் காவல் துறையினர் தனது தந்தையிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினர், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுப்பதைக்கூடகாவல் துறை தடுக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காவல் துறையினரே தவறான பாதையில் செல்கின்றனரோ என்ற சந்தேதம் நடுநிலையாளர்கள் மத்தியில் நிலவுகிறது. காவல் துறையினர் மீதே சந்தேகப் பார்வை விழுகின்ற நிலையில், இதனை மாநிலக் காவல் துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்காது.
எனவே முதல்-அமைச்சர் இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், உயிரிழந்த தங்கமணியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணிவழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்