search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி
    X
    கன்னியாகுமரி

    கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு- சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி

    சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவதால் அன்றைய தினம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    கன்னியாகுமரி:

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி நாள் அன்று சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா வருகிற 16-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும்போது சந்திரன் உதயமாகும் இவ்விரண்டு கட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழுகின்றன. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்த அபூர்வ காட்சியை உலகத்திலேயே கன்னியாகுமரியிலும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு மலைப் பகுதியிலும் மட்டும் தான் காண முடியும்.

    இந்த அபூர்வ காட்சியை காண ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல முடியாது. இதனால் கன்னியாகுமரியில் நிகழும் இந்த அபூர்வ காட்சியை காண சித்ரா பவுர்ணமி அன்று நாடு முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருப்பார்கள்.

    அன்று மாலை 6 மணிக்கு மேற்கு பக்கம் உள்ள அரபிக்கடல் பகுதியில் வர்ண ஜாலத்துடன் சூரியன் மஞ்சள் நிறத்தில் பந்து போன்ற வட்ட வடிவத்தில் கடலுக்குள் மறையும். அப்போது கிழக்கு பக்கம் உள்ள வங்கக்கடல் பகுதியில் கடலும் வானமும் சந்திக்கும் இடத்துக்கு மேல் பகுதியில் சந்திரன் நெருப்பு பந்து போன்ற வடிவத்தில் எழும். அப்போது கிழக்கு கடல் பகுதியில் உள்ள வானம் சந்திரனின் ஒளி வெளிச்சத்தால் “பளிச்” என்று மின்னும்.

    இந்த அரிய காட்சியை கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப்பகுதி, கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைப்பகுதி மற்றும் கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள முருகன் குன்றத்தில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள்.

    சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருகிற 16-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகம் விசே‌ஷ பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் போன்றவை நடக்கின்றன.

    மேலும் சித்ரா பவுர்ணமியை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காணிக்கையாக வழங்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனையும் நடைபெறுகிறது.

    சித்ரா பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவதால் அன்றைய தினம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×