என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திருப்பூர் மாவட்ட கடைகளில் அதிரடி சோதனை- தடை செய்யப்பட்ட 27 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தரமற்ற உணவு பொருட்கள், காலா வதியான உணவு பொருள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு துறையின் ‘வாட்ஸ்ஆப்’ எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் அனுப்பிய புகார் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடை மற்றும் தின்பண்டம் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 4.5 கிலோ காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். அந்த கடைகளுக்கு ‘நோட்டீஸ்’ வழங்கி எச்சரித்தனர்.
பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 4கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் 27.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களுக்கு, தலா 5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. காலாவதியான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் என 4.5 கிலோ காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்