search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சரத்குமார்
    X
    சரத்குமார்

    தென்மாவட்டங்களுக்கு ரெயில்களை வழக்கம்போல் இயக்க வேண்டும் - சரத்குமார் கோரிக்கை

    மாம்பலம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரெயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென் மாவட்ட பயணியர் ரெயில்கள் முன்புபோல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

    திருநெல்வேலி-திருச்செந்தூர், திருநெல்வேலி- செங்கோட்டை, திருநெல்வேலி-தூத்துக்குடி, மதுரை-செங்கோட்டை, மதுரை-ராமேஸ்வரம், மதுரை-திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென் மாவட்ட பயணியர் ரெயில்களும் முழுமையாக இயக்கப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

    பயணியர் ரெயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால் பணிக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு ஒன்றிய, மாநில அரசுகள் தென் மாவட்ட பயணியர் ரெயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டும். மாம்பலம் ரெயில் நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×