என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி ரூ.2 ஆயிரத்தை கொடுத்து முதியவரை ஏமாற்றிய மர்ம நபர்
Byமாலை மலர்27 Sep 2021 2:55 AM GMT (Updated: 27 Sep 2021 2:55 AM GMT)
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தில் மர்ம நபர் குழந்தைகள் வைத்து விளையாடும் போலி 2000 ரூபாய் நோட்டை கொடுத்து முதியவரை ஏமாற்றிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடத்தூர் :
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 72). கூலி தொழிலாளி. இவர் தன்னுடைய மகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்கு சித்தன் மருந்து வாங்க சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் சித்தனிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டு உள்ளார். இதனால் தன்னிடம் சில்லரையாக இருந்த பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு மருந்து கடைக்கு சென்றார். கடையை சென்றடைந்ததும், அந்த நபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மருந்து கேட்டு உள்ளார்.
அப்போது மருந்து கடைக்காரர், இந்த நோட்டு குழந்தைகள் வைத்து விளையாடும் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என திருப்பி கொடுத்துவிட்டார். இதை கேட்டதும் சித்தன் அதிர்ச்சி அடைந்தார்.
மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை நூதனமாக போலி ரூபாய் நோட்டு கொடுத்து மர்ம நபர் தன்னை ஏமாற்றி விட்டாரே என்ற வருத்தத்தில் அவர் வீட்டுக்கு சென்றார்.
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 72). கூலி தொழிலாளி. இவர் தன்னுடைய மகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள மருந்து கடைக்கு சித்தன் மருந்து வாங்க சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத ஒருவர் சித்தனிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டு உள்ளார். இதனால் தன்னிடம் சில்லரையாக இருந்த பணத்தை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு மருந்து கடைக்கு சென்றார். கடையை சென்றடைந்ததும், அந்த நபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மருந்து கேட்டு உள்ளார்.
அப்போது மருந்து கடைக்காரர், இந்த நோட்டு குழந்தைகள் வைத்து விளையாடும் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு என திருப்பி கொடுத்துவிட்டார். இதை கேட்டதும் சித்தன் அதிர்ச்சி அடைந்தார்.
மருந்து வாங்க வைத்திருந்த பணத்தை நூதனமாக போலி ரூபாய் நோட்டு கொடுத்து மர்ம நபர் தன்னை ஏமாற்றி விட்டாரே என்ற வருத்தத்தில் அவர் வீட்டுக்கு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X