என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
Byமாலை மலர்23 Sep 2021 4:28 AM GMT (Updated: 23 Sep 2021 4:28 AM GMT)
இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.
ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் வழக்கம்போல் பாக் ஜலசந்தி அருகே கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அவர்கள் தமிழக மீனவர்களிடம் இப்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகில் ஏறி அவர்களை தாக்கினர்
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக கரை திரும்ப முயன்றனர்.
அப்போது இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். 20க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை வெட்டினர்.
இதேபோல ரோந்து படகுகளை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். மேலும் கற்களை வீசி கண்ணாடியையும் உடைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மத்திய மாநில புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.
ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் வழக்கம்போல் பாக் ஜலசந்தி அருகே கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
அவர்கள் தமிழக மீனவர்களிடம் இப்பகுதியில் மீன் பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் விசைப்படகில் ஏறி அவர்களை தாக்கினர்
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அங்கிருந்து அவசரமாக கரை திரும்ப முயன்றனர்.
அப்போது இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தினர். 20க்கும் மேற்பட்ட படகுகளிலிருந்த மீன்பிடி வலைகளை வெட்டினர்.
இதேபோல ரோந்து படகுகளை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். மேலும் கற்களை வீசி கண்ணாடியையும் உடைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்து மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே விட்டுவிட்டு கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் குறித்து மத்திய மாநில புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதல் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X