search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கன அடியில் இருந்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 352 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 712 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கனஅடியும், கால்வாயில் 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 66.45 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 65.69 அடியானது.

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை மாலை மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×