என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூலை 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு
Byமாலை மலர்12 July 2021 7:04 AM GMT (Updated: 12 July 2021 7:04 AM GMT)
துல் ஹஜ் மாத முதல் பிறை நேற்று தென்பட்டதால், வருகிற 21-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான பக்ரீத், உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகளைகளில் ஒன்றாகும், நபிகள் நாயகத்தின் தியாகத்தை போற்றும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை வரும் ஜூலை 21-ந்தேதி புதன் கிழமையன்று கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாஹூத்தீன் முஹம்மது ஆயூஃப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், “ராமநாதபுரம், திருநெல்வேலி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூலை 11) துல் ஹஜ் மாத முதல் பிறை ஷரியத் முறைப்படி தென்பட்டது. எனவே இன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருகிறது. ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத் பண்டிகை) வருகிற ஜூலை 21ம் தேதி கொண்டாடப்படும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X