என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது
Byமாலை மலர்8 April 2021 4:56 AM GMT (Updated: 8 April 2021 6:24 AM GMT)
மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதைத்தவிர பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை கொஞ்சம் அதிகரித்து விநாடிக்கு 91 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் மிகப்பெரிய அணையான மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதைத்தவிர பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 79 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை கொஞ்சம் அதிகரித்து விநாடிக்கு 91 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
குடிநீருக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட, தொடர்ந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 98.61 அடியாக சரிந்தது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X