search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேலம் அருகே தீயில் கருகிய வாலிபர் பலி

    சேலம் அருகே தீயில் கருகி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 27). இவர் கடந்த மாதம் 8-ந் தேதி வீட்டில் பால் காய்ச்சுவதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய உடை மீது தீப்பற்றியது. இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கவுரிசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×