search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது

    தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 698 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 623 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 8 ஆயிரத்து 75 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் 35-வது நாளாக நேற்று 699 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 332 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 947 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 365 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 698 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 623 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 8 ஆயிரத்து 75 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.
    Next Story
    ×