என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீத்தாராம் யெச்சூரி தேர்தல் பிரசாரம்: மார்ச் 4 முதல் 6-ந் தேதி வரை மேற்கொள்கிறார்
Byமாலை மலர்21 Feb 2021 3:02 AM GMT (Updated: 21 Feb 2021 3:02 AM GMT)
வருகிற மார்ச் 4-ந் தேதி கோவை மற்றும் திருப்பூரிலும், மார்ச் 5-ந் தேதி சேலம் மற்றும் தர்மபுரியிலும், மார்ச் 6-ந் தேதி சென்னையிலும் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க.வும் மேலும் சில கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை முறியடிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் நடத்தி வருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோரும் தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஏற்கனவே, திட்டமிடப்பட்டு இருந்த சீத்தாராம் யெச்சூரியின் தேர்தல் பிரசார கூட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற மார்ச் 4-ந் தேதி கோவை மற்றும் திருப்பூரிலும், மார்ச் 5-ந் தேதி சேலம் மற்றும் தர்மபுரியிலும், மார்ச் 6-ந் தேதி சென்னையிலும் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வுடன், அ.தி.மு.க.வும் மேலும் சில கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை முறியடிப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் நடத்தி வருகிறது. இந்த தேர்தல் பிரசாரத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோரும் தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளனர்.
ஏற்கனவே, திட்டமிடப்பட்டு இருந்த சீத்தாராம் யெச்சூரியின் தேர்தல் பிரசார கூட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற மார்ச் 4-ந் தேதி கோவை மற்றும் திருப்பூரிலும், மார்ச் 5-ந் தேதி சேலம் மற்றும் தர்மபுரியிலும், மார்ச் 6-ந் தேதி சென்னையிலும் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X