search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருளானந்தம் - பைக் பாபு - ஹெரேன்பால்
    X
    அருளானந்தம் - பைக் பாபு - ஹெரேன்பால்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்பட பலரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் ஏற்கனவே சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணை நடத்தி, அ.தி.மு.க. முன்னாள் நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், பைக்பாபு, ஹெரேன்பால் ஆகியோரை கடந்த 5-ந்தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் கோவை மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேருக்கும் பிப்ரவரி 3-ந்தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அவர்கள் 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்க கோரி சி.பி.ஐ. சார்பில் ஏற்கனவே கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி நந்தினி தேவி விசாரித்து அருளானந்தம் உள்பட 3 பேருக்கும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
    Next Story
    ×