search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

    மண்சரிவுகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயில் சேவை தொடங்கியது.
    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு ஹில்குரோவ்- கல்லாறு ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து ஊட்டியில் மலைரெயில் சேவை நேற்று ஒருநாள் நிறுத்தப்பட்டது. நேற்று முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மண்சரிவுகள் அனைத்தும் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயில் சேவை தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரெயிலில் பயணம் செய்தனர்.

    Next Story
    ×