என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை
Byமாலை மலர்27 Dec 2020 6:18 AM GMT (Updated: 27 Dec 2020 6:18 AM GMT)
மதுரையில் ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் 60 பவுன் தங்கநகைகள் கொள்ளை போன சம்பவம் மாநகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் கே.புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா தல்லாகுளம் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன்-மனைவி இருவரும் தினமும் வீட்டை பூட்டி விட்டு காலையில் சென்றால் இரவில்தான் வீடு திரும்புவார்கள்.
இதனை யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல் முத்துக்குமார், அவரது மனைவி கார்த்திகா காலையில் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
மாலையில் வீடு திரும்பிய முத்துக்குமார்-கார்த்திகா பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.
இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
செல்லூர் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருப்பதாக முத்துக்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.
மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் பழனிக்குமார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). இவர் கே.புதூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா தல்லாகுளம் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன்-மனைவி இருவரும் தினமும் வீட்டை பூட்டி விட்டு காலையில் சென்றால் இரவில்தான் வீடு திரும்புவார்கள்.
இதனை யாரோ மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். நேற்று வழக்கம்போல் முத்துக்குமார், அவரது மனைவி கார்த்திகா காலையில் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
மாலையில் வீடு திரும்பிய முத்துக்குமார்-கார்த்திகா பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.
இதனால் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை அறிந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
செல்லூர் குற்றப்புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பீரோவில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளைபோய் இருப்பதாக முத்துக்குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.
மதுரை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு துணை கமிஷனர் பழனிக்குமார் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அகிம்சாபுரத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிப்பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூர் தொழிலதிபர் வீட்டில் 60 பவுன் தங்கநகைகள் கொள்ளை போன சம்பவம் மாநகர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X