என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு
Byமாலை மலர்4 Dec 2020 6:37 AM GMT (Updated: 4 Dec 2020 6:37 AM GMT)
புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.
திருவள்ளூர்:
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
புழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19 அடியை தாண்டியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும்.
புழல் ஏரி தண்ணீர் செல்லும் பாதையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X