என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி அருகே 16 வயது சிறுமி கற்பழிப்பு- ஆட்டோ டிரைவர் கைது
Byமாலை மலர்18 Oct 2020 3:53 AM GMT (Updated: 18 Oct 2020 3:53 AM GMT)
தென்காசி அருகே 16 வயது சிறுமி கற்பழிப்பு செய்ததாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்த பெற்றோர் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள புளிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி உள்ளார். மேலும், ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் மாதம் கட்டாயப்படுத்தி அந்த சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சுப்புராஜ் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுகுறித்து அவள் தனது தாயிடம் கூறினாள். உடனே அவர் சுப்புராஜின் பெற்றோரான சுந்தர்ராஜ் (56), மாரியம்மாள் (49) ஆகியோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் கருவை கலைத்து விடு என்றும், ரூ.2 லட்சம் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் சமூகநலத்துறை அதிகாரி பாக்கியத்தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர். மேலும், கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தர்ராஜ், மாரியம்மாள் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான சுப்புராஜ் கடந்த மே மாதம் இன்னொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்காசி அருகே உள்ள புளிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 26). ஆட்டோ டிரைவரான இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பேசி பழகி உள்ளார். மேலும், ஆசை வார்த்தை கூறி கடந்த மார்ச் மாதம் கட்டாயப்படுத்தி அந்த சிறுமியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும் சுப்புராஜ் தெரிவித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இதுகுறித்து அவள் தனது தாயிடம் கூறினாள். உடனே அவர் சுப்புராஜின் பெற்றோரான சுந்தர்ராஜ் (56), மாரியம்மாள் (49) ஆகியோரிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள் கருவை கலைத்து விடு என்றும், ரூ.2 லட்சம் தருகிறோம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் சமூகநலத்துறை அதிகாரி பாக்கியத்தாய் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்தனர். மேலும், கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தர்ராஜ், மாரியம்மாள் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான சுப்புராஜ் கடந்த மே மாதம் இன்னொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X