search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி சிறுமி கற்பழிப்பு"

    • ரோந்து போலீசார் சிறுமி தனியாக நிற்பதை பார்த்து அவரிடம் விசாரித்தனர்.
    • சிறுமியை போலீசார் பத்திரமாக அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் இரவு செங்கோட்டைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக அவர் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோவில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்கள் 3 பேரும் சிறுமிக்கு தெரிந்தவர்கள் என்று கூறப்படுகிறது. சிறுமி தனியாக நிற்பதை பார்த்து 3 பேரும் அவரை ஆட்டோவில் தங்களுடன் வருமாறும், வீட்டில் இறக்கி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இதனை நம்பிய சிறுமி ஆட்டோவில் ஏறி புறப்பட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும் 3 பேரும் சேர்ந்து சிறுமியின் வாயில் துணியை வைத்து அழுத்தி கட்டி கடத்தி சென்றனர். அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று சிறுமியை 3 பேரும் சேர்ந்து மாறி மாறி கற்பழித்தனர்.

    இதில் சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டார். தொடந்து சிறுமியை அதிகாலையில் ஆட்டோவில் ஏற்றி சென்று மீண்டும் தென்காசி ஊருக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டனர். பின்னர் 3 பேரும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்றனர்.

    அந்த நேரத்தில் அங்கு வந்த ரோந்து போலீசார் சிறுமி தனியாக நிற்பதை பார்த்து அவரிடம் விசாரித்தனர். உடனே சிறுமியும் நடந்த விபரங்களை தெரிவித்தார். இதையடுத்து அந்த சிறுமியை போலீசார் பத்திரமாக அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மாதவன்(வயது 33) தனது நண்பரான வெங்கடேஷ், கீழ வாலிபன் பொத்தையை சேர்ந்த அந்தோணி(20) ஆகிய 3 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து தென்காசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அந்தோணி மற்றும் மாதவனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கடேசை தேடி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாதவனின் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×