search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
    X
    தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

    முதலமைச்சர் தாயார் உடல் தகனம்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
    சேலம்:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

    தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

    முதலமைச்சரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
     
    இந்நிலையில் மறைந்த முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல் வீட்டில் இருந்து மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் உறவினர்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    Next Story
    ×