search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 46 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 470 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 76 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 145
    செங்கல்பட்டு - 2,382
    சென்னை - 9,938
    கோவை - 4,655
    கடலூர் - 1,807
    தர்மபுரி - 1,141
    திண்டுக்கல் - 591
    ஈரோடு - 1,129
    கள்ளக்குறிச்சி - 618
    காஞ்சிபுரம் - 1,288
    கன்னியாகுமரி - 819
    கரூர் - 510
    கிருஷ்ணகிரி - 795 
    மதுரை - 754
    நாகை - 717
    நாமக்கல் - 937
    நீலகிரி - 736
    பெரம்பலூர் - 120
    புதுக்கோட்டை - 822
    ராமநாதபுரம் - 194
    ராணிப்பேட்டை - 549
    சேலம் - 2,448
    சிவகங்கை - 298
    தென்காசி - 541
    தஞ்சாவூர் - 1,344
    தேனி - 504
    திருப்பத்தூர் - 639
    திருவள்ளூர் - 1,660
    திருவண்ணாமலை - 1,010
    திருவாரூர் - 901
    தூத்துக்குடி - 729
    திருநெல்வேலி - 947
    திருப்பூர் - 1,677
    திருச்சி - 848
    வேலூர் - 931
    விழுப்புரம் - 903
    விருதுநகர் - 322
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 4
    உள்நாடு - 50
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 46,405
    Next Story
    ×