search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 65 ஆயிரம் கன அடியாக குறைந்தது

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
    பென்னாகரம்:

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் இந்த 2 அணைகளின் பாதுகாப்பை கருதி உபரி நீர் அப்படியே திறந்துவிடப்பட்டது.

    இதனால் நேற்று காலை வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. பின்னர் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

    இதையடுத்து கர்நாடகா அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 65 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலம் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×