என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால்தான் மரணம்- ஐ.ஜி. சங்கர் தகவல்
Byமாலை மலர்17 Sep 2020 5:30 AM GMT (Updated: 17 Sep 2020 5:30 AM GMT)
கோவையில் இறந்த இலங்கை தாதா அங்கொட லொக்கா மாரடைப்பால்தான் மரணம் அடைந்ததாக உடற்கூறு அறிக்கை மூலம் தெரியவந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார்.
கோவை:
இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொட லொக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவர், சென்னையில் பதுங்கி இருந்தார். பின்னர் கோவையில் போலி பெயரில் வீடு பிடித்து தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி தான்சி கூறினார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவர் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் வக்கீல் சிவகாமிசுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் காதலி தான்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் உடற்கூறு அறிக்கை வந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, இந்த அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இறந்தவர் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை சேர்ந்த பிரபல தாதா அங்கொட லொக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இலங்கையில் இருந்து தப்பி வந்த அவர், சென்னையில் பதுங்கி இருந்தார். பின்னர் கோவையில் போலி பெயரில் வீடு பிடித்து தங்கி இருந்தார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி தான்சி கூறினார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டது. அவர் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் வக்கீல் சிவகாமிசுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் காதலி தான்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் உடற்கூறு அறிக்கை வந்து இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, இந்த அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் கூறப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இறந்தவர் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X