என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்15 Sep 2020 6:47 AM GMT (Updated: 15 Sep 2020 6:47 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு- மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று காலையில் 92.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 92 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று காலையில் 8 ஆயிரத்து 608 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து விநாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் கிழக்கு- மேற்கு கால்வாயில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று காலையில் 92.37 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலையில் 92 அடியாக சரிந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X