search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கிசான் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர்

    கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * நாட்டிலேயே கொரோனா இறப்பு தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

    * அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

    * தமிழகத்தில் போதிய மருத்துவ கருவிகள் இருப்பில் உள்ளன.

    * திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் வசதிக்காக ரூ.31.24 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.

    * திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

    * குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வந்தவாசியில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

    * நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

    * கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான்.

    * கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    * கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்
    Next Story
    ×