என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் எம்.எல்.ஏ.மன்னை மு.அம்பிகாபதி மரணம்
Byமாலை மலர்15 July 2020 8:59 AM GMT (Updated: 15 July 2020 8:59 AM GMT)
தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ.மன்னை மு.அம்பிகாபதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
மன்னார்குடி:
முன்னாள் எம்.எல்.ஏ.வான மன்னை மு.அம்பிகாபதி(வயது 83) நேற்று இரவு மரணம் அடைந்தார். 15.8.1937 அன்று பிறந்த அம்பிகாபதி 1977 மற்றும் 1980 ஆகிய 2 முறை மன்னார்குடி சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினராக இருந்தவர். இவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலத்தில் சைக்கிளில் இருவர் பயணம் செய்வதற்கு சட்டரீதியான அனுமதி பெற்றுத்தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் 1985-1986-ம் ஆண்டு சிறுசேமிப்புத்துறை துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1987-ம் ஆண்டு முதல் மன்னார்குடி கம்பன் கழக தலைவராக இருந்து வந்தார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று இலக்கிய சொற்பொழிவாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலம் குன்றியதால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வான மன்னை மு.அம்பிகாபதி(வயது 83) நேற்று இரவு மரணம் அடைந்தார். 15.8.1937 அன்று பிறந்த அம்பிகாபதி 1977 மற்றும் 1980 ஆகிய 2 முறை மன்னார்குடி சட்டசபை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினராக இருந்தவர். இவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலத்தில் சைக்கிளில் இருவர் பயணம் செய்வதற்கு சட்டரீதியான அனுமதி பெற்றுத்தந்தவர் என்ற பெருமைக்கு உரியவர். மேலும் 1985-1986-ம் ஆண்டு சிறுசேமிப்புத்துறை துணை தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
1987-ம் ஆண்டு முதல் மன்னார்குடி கம்பன் கழக தலைவராக இருந்து வந்தார். தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தொடர்ந்து இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று இலக்கிய சொற்பொழிவாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் உடல் நலம் குன்றியதால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X