search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவில் இருந்து 6 ஆயிரத்து 200 பேர் மீட்பு

    தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து 400 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 200-ஐ கடந்தது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.  

    இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் உள்ளடக்கம். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர் விமான நிலையத்திலும், ரெயில் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் இன்று ஒரே நாளில் கொரோனா பரவியவர்களில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

    இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது.
    Next Story
    ×