என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளிர் தினம்: 2 மின்சார ரெயில்களை பெண்களே ஓட்டினார்கள்
Byமாலை மலர்7 March 2020 5:37 AM GMT (Updated: 7 March 2020 6:22 AM GMT)
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரெயில்களை பெண்கள் இயக்கினர்.
சென்னை:
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரெயில்களை பெண்கள் இயக்கினர். மகளிரை போற்றும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்பட்ட மின்சார ரெயிலை பெண் என்ஜின் டிரைவர் ஓட்டிச்சென்றார்.
இதனை பார்த்த பயணிகள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பாராட்டுகளையும் தெரிவித்தனர். சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து ரெயில் புறப்பட்டபோது பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் ஆரவாரம் செய்தனர்.
அந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகர், போலீஸ் பாதுகாப்பு, சுகாதாரம், அனைத்தையும் பெண்களே மேற்கொண்டனர்.
இந்த ரெயில் ஒவ்வொரு நிலையத்திற்கு செல்லும் போதும் அங்கு பெண் ஊழியர்களே சிக்னல் மூலம் வரவேற்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை நாளாக இருப்பதால் இன்று மகளிர் மூலம் ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் 2 புறநகர் மின்சார ரெயில்களை பெண்கள் இயக்கினர். மகளிரை போற்றும் விதமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.15 மணிக்கு திருவள்ளூருக்கு புறப்பட்ட மின்சார ரெயிலை பெண் என்ஜின் டிரைவர் ஓட்டிச்சென்றார்.
இதனை பார்த்த பயணிகள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். பாராட்டுகளையும் தெரிவித்தனர். சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து ரெயில் புறப்பட்டபோது பிளாட்பாரத்தில் நின்ற பயணிகள் ஆரவாரம் செய்தனர்.
அந்த ரெயில் திருவள்ளூரில் இருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் டிக்கெட் பரிசோதகர், போலீஸ் பாதுகாப்பு, சுகாதாரம், அனைத்தையும் பெண்களே மேற்கொண்டனர்.
இந்த ரெயில் ஒவ்வொரு நிலையத்திற்கு செல்லும் போதும் அங்கு பெண் ஊழியர்களே சிக்னல் மூலம் வரவேற்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறை நாளாக இருப்பதால் இன்று மகளிர் மூலம் ரெயில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X