என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கள்ளக்காதலை கண்டித்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- மாணவர் உள்பட 4 பேர் கைது
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி மகேஸ்வரி (வயது 32). இவருக்கும் ஆறுமுகம் மகன் செல்வராஜ் (35) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மகேஸ்வரியின் மகளுக்கும், செல்வராஜ் பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் மகேஸ்வரியின் குடும்பத்தினர் செல்வராஜை சத்தம் போட்டுள்ளனர்.
சம்பவத்தன்று மகேஸ்வரியின் தாய் அருக்கானி மற்றும் அவரது உறவினர்கள் செல்வராஜை கடுமையாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தனது அண்ணன்கள் சகாயராஜ் (47), ஆனந்தன் (40) மற்றும் ஆனந்தனின் 17 வயது பள்ளி மாணவன் ஆகியோருடன் அருக்கானி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அவரிடம் தகராறு செய்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். படுகாயமடைந்த அருக்கானி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஒட்டன் சத்திரம் போலீசார் செல்வராஜ் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்