என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துடன் 2 சுரங்க பாதைகள் இணைப்பு
Byமாலை மலர்11 Feb 2020 7:23 AM GMT (Updated: 11 Feb 2020 7:23 AM GMT)
அண்ணா சாலையில் அடுத்த மாதம் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் 2 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரம் வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.
மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ நிறுவனம் செய்து வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள 2 சுரங்கப் பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்பட உள்ளது.
அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள 3 வழியுடன் கூடிய வாலாஜா சாலை சுரங்க நடைபாதை மற்றும் அண்ணா சாலை பன்நோக்கு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவை அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் விரைவில் இணைக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை துறை இந்த 2 சுரங்கப்பாதைகளை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது இணைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் அண்ணா சாலை சுரங்கப்பாதையில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதில் சென்று அடையலாம்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்றுவர வசதியாக அண்ணா சாலையில் உள்ள 2 முக்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்படும்.
இதன் மூலம் அண்ணா சாலையில் இருந்து பயணிகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை எளிதில் சென்று அடையலாம். இதன்மூலம் பயணிகள், பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரம் வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள்.
மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்று வர வசதியாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ நிறுவனம் செய்து வருகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள 2 சுரங்கப் பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்பட உள்ளது.
அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள 3 வழியுடன் கூடிய வாலாஜா சாலை சுரங்க நடைபாதை மற்றும் அண்ணா சாலை பன்நோக்கு மருத்துவமனை அருகில் உள்ள சுரங்கப்பாதை ஆகியவை அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் விரைவில் இணைக்கப்படுகிறது.
நெடுஞ்சாலை துறை இந்த 2 சுரங்கப்பாதைகளை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. தற்போது இணைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இதன் மூலம் அண்ணா சாலை சுரங்கப்பாதையில் இருந்து அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை பயணிகள் எளிதில் சென்று அடையலாம்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் சென்றுவர வசதியாக அண்ணா சாலையில் உள்ள 2 முக்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துடன் அடுத்த மாதம் இணைக்கப்படும்.
இதன் மூலம் அண்ணா சாலையில் இருந்து பயணிகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தை எளிதில் சென்று அடையலாம். இதன்மூலம் பயணிகள், பொது மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X