என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் நித்தியானந்தா ஆசிரமம் முன்னாள் நிர்வாகி கொலை
Byமாலை மலர்30 Jan 2020 9:34 AM GMT (Updated: 30 Jan 2020 9:34 AM GMT)
புதுவையில் நித்தியானந்தா ஆசிரமம் முன்னாள் நிர்வாகி நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 51). இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பேக்கரி கடை நடத்தி வந்த இவர், நித்தியானந்தாவின் சீடராக இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏம்பலத்தில் செயல்பட்டு வந்த நித்தியானந்தா ஆசிரம கிளை நிர்வாகியாக இருந்து வந்தார். அதன் பிறகு அதில் இருந்து விலகி பேக்கரி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வஜ்ரவேலு ஏம்பலம் அருகே செம்பியம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மா வசந்தாவிடம் ரூ. 2 லட்சம் பணம் வாங்கி வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு காரில் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் வசந்தாவிடம் போனில் பேசி கேட்டபோது, வஜ்ரவேல் பணத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டதாக தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும் பத்தினர் வஜ்ரவேலுவை பல இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் இல்லை. இதையடுத்து கரிக்கலாம் பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
இதற்கிடையே வஜ்ரவேலுவின் கார் பாகூர் அருகே குருவிநத்தம் சமுதாயநல கூடம் அருகில் கேட்பாரற்று நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காரை திறந்து பார்த்தனர். காரின் பின் இருக்கையில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் காரில் கொண்டு சென்ற ரூ.2 லட்சமும் மாயமாகி இருந்தது.
பணத்துக்காக வஜ்ரவேலை மர்ம நபர்கள் கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது வஜ்ரவேலின் உடல் நிர்வாண நிலையில் கிடந்ததால் பெண் தொடர்பால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X