search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஸ் கார்த்தி - ராகுல் - மணிகண்டன்
    X
    பப்ஸ் கார்த்தி - ராகுல் - மணிகண்டன்

    மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் - கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    கோவையில் பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    கோவை:

    கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த மாதம் 26-ந் தேதி தனது காதலனுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் காதலனை தாக்கி விட்டு மாணவியை மறைவிடத்திற்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சீரநாயக்கன் பாளையம் மணிகண்டன் (27), பப்ஸ் கார்த்தி (26), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    அவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 6 பேரும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட மணிகண்டன், பப்ஸ் கார்த்தி, ராகுல் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனைத்து மகளிர் போலீசார் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதனை ஏற்றுக்கொண்டு போலீஸ் கமி‌ஷனர் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

    இதற்கான உத்தரவு நகல் 3 பேர் அடைக்கப்பட்டு உள்ளகோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மற்ற 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    Next Story
    ×