என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
Byமாலை மலர்21 Dec 2019 6:26 AM GMT (Updated: 21 Dec 2019 6:26 AM GMT)
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 643 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 100 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வழக்கம் போல திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் கடந்த மாதம் 12-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும், சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 40-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 4 ஆயிரத்து 643 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 100 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரியில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை முதல் காவிரியில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் வழக்கம் போல திறந்து விடப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நடப்பாண்டில் கடந்த மாதம் 12-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. அதன் பின்னர் அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும், சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து 40-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X