என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊட்டி மலை ரெயில் சேவை 29-ந்தேதி வரை ரத்து
Byமாலை மலர்24 Nov 2019 6:42 AM GMT (Updated: 24 Nov 2019 6:42 AM GMT)
ஊட்டி மலை ரெயில் சேவை வருகிற 29-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 17-ந் தேதி ஊட்டி மலை ரெயில் பாதையில் பாறை சரிந்து விழுந்தது. தண்டவாளத்தில் மண் சரிவும் ஏற்பட்டது.
இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே அந்த பாறைகளை வெடி வைத்து அகற்ற ரெயில்வே துறையினர் முடிவு செய்தனர். அதன்படி ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும் குன்னூரிலிருந்து ஹில்குரோவ் வரை தண்டவாளத்தில் விழுந்த பாறை, கற்களை முழுமையாக அகற்ற முடியவில்லை.
இதனால் மலை ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வருகிற 29-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதனால் மலை ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 17-ந் தேதி ஊட்டி மலை ரெயில் பாதையில் பாறை சரிந்து விழுந்தது. தண்டவாளத்தில் மண் சரிவும் ஏற்பட்டது.
இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை முழுமையாக அகற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே அந்த பாறைகளை வெடி வைத்து அகற்ற ரெயில்வே துறையினர் முடிவு செய்தனர். அதன்படி ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனாலும் குன்னூரிலிருந்து ஹில்குரோவ் வரை தண்டவாளத்தில் விழுந்த பாறை, கற்களை முழுமையாக அகற்ற முடியவில்லை.
இதனால் மலை ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வருகிற 29-ந் தேதி வரை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதனால் மலை ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X