search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
    X
    கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

    உத்தமபாளையம் அருகே ஜே.சி.பி டிரைவர் குத்திக்கொலை - உறவினர்கள் மறியல்

    உத்தமபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஜே.சி.பி டிரைவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்பாசமுத்திரம் மேற்குதெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் ராஜேஷ்(27) ஜே.சி.பி டிரைவர். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், 3½ வயதில் பெண்குழந்தையும், 10 மாதமான பெண்குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை ராஜேஷ் உத்தமபாளையம் யூனியன் அலுவலகத்துக்கு செல்வதாக கூறிச்சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் இவர் கிடைக்கவில்லை. இதுபற்றி தீபா ராஜேசின் உறவினர் முருகன் என்பவரிடம் கூறினார். இதையடுத்து முருகன் ராஜேசை தேடிச்சென்றார். உத்தமபாளையம் புதூர் அருகே வயல்பகுதியில் சென்றபோது அங்கு ராஜேசின் அலறல் சத்தம் கேட்டது.

    உடனே முருகன் விரைந்து சென்று பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே ஊரை சேர்ந்த முருகன் மகன் பொம்மையன் என்பவர் ராஜேசை பிடித்துக்கொள்ள கனகராஜ் மகன் செல்வக்குமார் என்பவர் கத்தியால் ராஜேசை குத்தினார்.

    மேலும் அவரது நாக்கையும் அறுக்க முயன்றனர். இதை பார்த்த முருகன் சத்தம் போட்டார். உடனே 2 பேரும் முருகனை மிரட்டிவிட்டு ஓடிவிட்டனர். கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி உத்தமபாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து செல்வக்குமார், பொம்மையன் ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    ராஜேஷ் கொலைக்கு காரணம் என்ன? பெண் தகராறு காரணமாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டாரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ராஜேசை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அங்கு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
    Next Story
    ×