search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்வதை காணலாம்
    X
    சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்வதை காணலாம்

    நீர்வரத்து சரிவு - ஒகேனக்கல்லில் இன்று பரிசல் இயக்க அனுமதி

    நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கல்லில் இன்று காலை மாமரத்துகடுவு பகுதியில் இருந்து மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து. தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிய தொடங்கியது.

    நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் நீர்வரத்து சரிந்து 6 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது 6 ஆயிரம் கனஅடி நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கல்லில் இன்று காலை மாமரத்துகடுவு பகுதியில் இருந்து மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. 6 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கியதால் இன்று ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×