search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறு பஸ் நிலையத்திற்குள் புகுந்த அரசு டவுன் பஸ் இரும்பு கம்பிகளை உடைத்து நின்ற காட்சி.
    X
    செய்யாறு பஸ் நிலையத்திற்குள் புகுந்த அரசு டவுன் பஸ் இரும்பு கம்பிகளை உடைத்து நின்ற காட்சி.

    செய்யாறில் பஸ் நிலைய பிளாட்பாரத்தில் திடீரென புகுந்த டவுன் பஸ்

    செய்யாறு பஸ் நிலையத்தில் இன்று காலை திடீரென அரசு டவுன் பஸ் பஸ் நிலையத்திற்குள் புகுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
    செய்யாறு:

    செய்யாறு பஸ் நிலையத்தில் இன்று காலை 9 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வெளிïர் செல்லும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு வந்த டவுன் பஸ் பஸ் நிலையத்திற்குள் வந்தது. டிரைவர் பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்துவதற்காக பின்னோக்கி ஓட்டினார். அவரது கவனக்குறைவால் பஸ் தறிகெட்டு ஓடி பஸ் நிலையத்திற்குள் பிளாட்பாரத்தில் புகுந்தது. 

    அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் சிதறி ஓடினர். பஸ்நிலைய கம்பி மீது பஸ் மோதி நின்றதால் மாணவர்கள் பயணிகள் மீது பஸ் மோதவில்லை. அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ் மோதியதில் பஸ் நிலைய கம்பி மற்றும் கூரைகள் சேதம் அடைந்தன. இதனை நேரில் கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பஸ் நிலையத்திற்குள் வாகனங்களை ஓட்டும்போது டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
    Next Story
    ×