search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பன்னீரின் உடல்.
    X
    தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பன்னீரின் உடல்.

    ஆரோவில்லில் கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ளது குயிலாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் பன்னீர் (வயது 33). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    அருணாவின் தங்கை சீத்தா (26). இவர் தனது அக்காவின் வீட்டு அருகே வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சீத்தாவுக்கும், பன்னீருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த விபரம் அருணாவுக்கு தெரிய வந்தது. அவர் தனது கணவரையும், தங்கையையும் கண்டித்தார். இதனால் பன்னீர் மனவேதனை அடைந்தார்.

    நேற்று இரவு அவர் வீட்டில் தனிமையில் இருந்தார். அப்போது திடீரென்று வீட்டில் பன்னீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தனது கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அருணா கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதற்கிடையே பன்னீர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவரம் அருணாவின் தங்கை சீத்தாவுக்கு தெரிய வந்தது.

    இதனால் அவரும் மனவேதனை அடைந்தார். பின்னர் வீட்டில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி தூக்கில் தொங்கினார்.

    இதையறிந்த உறவினர்கள் சீத்தாவின் வீட்டுக்குள் சென்று அங்கு தூக்கில் தொங்கிய அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்காதலை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×