என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் மழையால் கிரிவலப்பாதையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது
Byமாலை மலர்30 Oct 2019 10:38 AM GMT (Updated: 30 Oct 2019 10:38 AM GMT)
திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் மழையால் கிரிவலப் பாதையில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து காலை 8 மணி வரை மிதமான மழை பெய்தது. பின்னர் காலை 9 மணியளவில் இருந்து தொடர்ந்து ½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.15 மணி வரை பலத்த மழை பெய்தது.
இரவிலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல்வேறு கோவில்கள் உள்ளது. அதுமட்டுமின்றி கோவில்கள் அருகில் குளங்களும், வனப்பகுதியிலும் பல்வேறு குளங்கள் உள்ளன.
இந்த நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக கிரிவலப்பாதையில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் வர தொடங்கி உள்ளதால் நிரம்பி வருகிறது. ஒருசில குளங்கள் நிரம்பியும், சில குளங்கள் பாதி வரை நிரம்பியும் காணப்பட்டது.
அதுமட்டுமின்றி சில குளங்களில் தண்ணீர் இல்லாமலும் உள்ளது. எனவே மழை காலத்தை கருத்தில் கொண்டு குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரினால் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து குளங்களில் தண்ணீர் நிரம்பும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் நேற்று அதிகாலை 4 மணியில் இருந்து காலை 8 மணி வரை மிதமான மழை பெய்தது. பின்னர் காலை 9 மணியளவில் இருந்து தொடர்ந்து ½ மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. தொடர்ந்து மாலை 4.45 மணி முதல் 5.15 மணி வரை பலத்த மழை பெய்தது.
இரவிலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பல்வேறு கோவில்கள் உள்ளது. அதுமட்டுமின்றி கோவில்கள் அருகில் குளங்களும், வனப்பகுதியிலும் பல்வேறு குளங்கள் உள்ளன.
இந்த நிலையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக கிரிவலப்பாதையில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் வர தொடங்கி உள்ளதால் நிரம்பி வருகிறது. ஒருசில குளங்கள் நிரம்பியும், சில குளங்கள் பாதி வரை நிரம்பியும் காணப்பட்டது.
அதுமட்டுமின்றி சில குளங்களில் தண்ணீர் இல்லாமலும் உள்ளது. எனவே மழை காலத்தை கருத்தில் கொண்டு குளங்களுக்கு தண்ணீர் வரும் கால்வாய்களை தூர்வாரினால் கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து குளங்களில் தண்ணீர் நிரம்பும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X